என் மனசு

சிக்கவைக்கும்
தெத்துப்பல் சிரிப்பு,
முத்துக்கள் சிதறும்
சிவந்த கன்னம்,
சந்தனச்சிலை போன்ற
தேகம்,
மொத்தத்தில்-
பிரம்மன் செய்த
பளிங்குச் சிற்பம்..!

கண்டவுடனே
அவளுக்குள்-
செத்துகுக் கிடக்கிறது,
என் மனசு..!

எழுதியவர் : மாரி சிவா (19-Jan-16, 12:05 pm)
பார்வை : 324

மேலே