எனக்குள் வந்த உயிர் துளி நீ 555

என்னவளே...
வீசும் அனல்காற்றில்
புழுதிகள் பறக்கிறது...
தார்சாலைகளில் கானல் நீர்
வெப்பம் தெரிகிறது...
வயல்வெளிகள் எல்லாம்
வறண்டு வெடித்து பிளக்கிறது...
நீரின்றி கொக்குகளும் நாரைகளும்
கருவேலங்காட்டில் செத்துமடியுதடி...
நீரின்றி ஆலமரத்து
வேர்களும் காய்ந்து போனதடி...
நீரின்றி என் நாவு
வரண்டுபோகும் நேரத்தில்...
விண்ணிலிருந்து பூமிக்கு
வந்த மழைத்துளி நீ...
என் வாழ்வுக்கு
உயிர்த்துளி நீ...
நந்தவனமாக நான் செழிக்க
வேண்டுமடி என் வாழ்வில் என்றும் நீ.....