அரைஞாண் கயிறு அறிவியலும் ஆய்வும்

ஏன் அரைஞாண் கயிறு கட்டினார்கள் தமிழர்கள் :

வெகுவாக ஆண்கள் தான் கனமான பொருட்களை சுமந்து வேலை செய்வார்கள்.அப்படி செய்யும்போது மூச்சு முக்கி வயிறு நன்கு அழுத்தப்பட்ட நிலையை அடையும் அப்பொழுது குடலிறக்கம் ஏற்படலாம்.

இந்த குடலிறக்க நோய் அதிகமாக ஆண்களுக்கு வருவதையுணர்ந்த நம் தமிழ் அறிஞர்கள் மருத்துவர்கள் ஏன் இந்த நோய் பெண்களுக்கு வருவதில்லை என்பதையும் ஆய்வு மேற்கொள்ள அதில் அவர்களுக்கு கிடைத்த ஒரு வியப்பூட்டும் செய்தி என்னவெனில் பெண்கள் பின் கொசுவம் வைத்து கட்டும் கண்டாங்கி சேலை இறுக்கமாக அவர்கள் வயிற்றை சுற்றி பிடித்திருப்பதை உணர்ந்தனர் பின் அன்றில் இருந்து இன்று வரையும் எந்த ஒரு கனமான பொருட்களை எடுத்து வேலை செய்யும்போது துண்டையோ, கயிற்றையோ இடுப்பில் கட்டும் பழக்கம் நம்மோர்க்கு உண்டு. அந்த பழக்கம் பழக பழக வழக்கமாய் அரைஞாண் கயிறாக நின்று விட்டது…
அறிவியலாய் விளங்கிய இனம் நம் இனம் மறவாமல். அரைஞாண் கயிற்றை கட்டியிருப்போர் ஒவ்வொரு தமிழனும் இதை பகிருங்கள்…

எழுதியவர் : பகிர்வு:செல்வமணி (25-Jan-16, 10:41 am)
பார்வை : 167

மேலே