உயிர்ப்பு

ஆரம்பத்திலேயே
உனதிந்தத்
திட்டமிடல் தோன்றியிருக்காது
ஆதாமின்
விலா எலும்பிலிருந்து
உயிர்த்ததாக
நீ நம்பியிருக்க
சாத்தியமில்லை தான். ...

வழி வழியாக
வந்தது போல்
உனக்கும் வந்திருக்க வேண்டும். ..

கண்ணின்
கவன்விட்டெறி
சிறு கல்லில்
எண்ணற்ற சாம்ராஜ்யங்கள்
சுக்குநூறாகி ...
மாமலைகளெல்லாம்
சிறு கடுகாகி
சிதைந்தது போன்று -
இது போயின்
சாதல் தான். ....என்னும்
சிற்றுளி உன்னையும்
செதுக்கியிருக்க வேண்டும். ...

செதுக்கி செதுக்கி
ஊசிமுனையாகிப் போன
உனது
உளி கொண்டு
நீயெனைச் செதுக்குகிறாய் -
உனது செதுக்குதலில்
எனது விலா எலும்பு
உயிர்த்துக் கொண்டிருக்கிறது.

எழுதியவர் : பாலா (25-Jan-16, 7:09 pm)
பார்வை : 137

மேலே