ஒரு புதிய போர் யுக்தி

ஒரு புதிய போர் யுக்தி
இந்திய உளவு பிரிவு “ரா” , நம்முடைய அண்டைய எதிரி நாடு தீவிரவாதிகளை கொண்டு மிக பெரிய தாக்குதலை செய்து நம்முடைய சுதந்திர தினத்தை சீர்குலைக்க சதி செய்வதாகவும், நம் ராணுவத்தின் கவனத்தை திசை திருப்ப சியாச்சின் மலை முகடுகளில் மிக பெரிய ராணுவ படை பிரிவை குவித்து இருப்பதாகவும் ரகசிய தகவலை இந்திய அரசுக்கு தெரியபடுத்தியது. அரேபியன் கடலில் சிந்து நதி முகத்துவாரத்தின் அருகே தீவிரவாதிகள் முகாமிட்டிருப்பதை செயற்கை கோளும் உறுதி செய்தது.

கடல் வழியாக நம் நாட்டு நீர் முழ்கி கப்பலில் அந்த இடத்திற்கு சென்று ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி, அதே சமயம் வான் வழியாக எதிரி நாட்டின் உள்ளே நுழைந்து அந்த தீவிரவாதிகளை தீர்த்து கட்ட திட்டம் (ஆபரேஷன்) தயாரானது.

ஆனால் ..... எதிரி நாட்டின் வான்வெளி எல்லைக்குள் ஒரு காகம் நுழைந்தாலும் சுட்டு வீழ்த்தப்படும் நிலையில், அந்நாட்டின் ரேடார் கண்காணிப்பை ஏமாற்றி இந்த தாக்குதலை சாதித்து முடிப்பது என்பது ஒரு சவாலான கேள்விகுறியே? ....

எனவே ஐரோப்பிய அணு ஆராய்சி கழகத்தில் நம் இந்தியா சார்பாக ஆராய்சியில் ஈடுபடும் தஞ்சாவூரை சார்ந்த இயற்பியல் பேராசிரியர் சந்துரு என்கிற சந்திரசேகர் உதவியை நாடுவது என முடிவு செய்யப்பட்டது.

சந்துரு ராணுவத்திடம் “இந்த ஆபரேஷன் செய்து முடிக்க எவ்வளவு நேரம் தேவைப்படும்” என்றார்.

“இரண்டே மணி நேரம் போதும். அதற்குள் எங்கள் வேலை கச்சிதமாக முடிந்துவிடும்” உறுதியாக சொன்னது ராணுவம்.

சந்துருவும் தன் திட்டத்தை விளக்கி சொன்னார். ஆனால் ....

சந்துரு சொன்ன அறிவியல் யோசனையை இந்திய அரசு ஏற்கும்படி இல்லை. ஏனெனில் இது நம்முடைய ராணுவ வீரர்களின் விலை மதிக்க முடியாத உயிர் பிரச்சினை. எனவே அவரின் யோசனையை எப்படி நம்புவது என்று குழம்பினர்.

ஆனால் சந்துருவோ “சரி இதை நான் விளக்கி சொல்வதை விட டெமோவாக (Demo) செய்துகாட்டுகிறேன்” என்றார். அவரின் யோசனைப்படி மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையம் 2 மணி நேரம் மூடப்பட்டது. விமான சேவை அந்த நேரத்தில் முற்றிலும் நிறுத்தபட்டது. பின்பு சிதம்பரம் நடராஜர் சிலையை போலவே தத்ரூபமாக வடிக்கப்பட்ட ஒரு பெரிய வெண்கல சிலை விமான நிலையத்தின் ஒரு பகுதியில் நிறுவப்பட்டது. சந்துரு சொன்னபடி ஒரே ஒரு சிறிய ரக விமானம் மட்டும் வானில் வட்டமடித்து கொண்டிருந்தது. அது விமான நிலைய ரேடாரில் தெளிவாக தெரிந்தது.

சந்துரு அந்த நடராஜர் சிலையின் வளைவு நெளிவுகளுக்கு ஏற்ப சில நேர குறிஈடுகளை சர்குயூட் கேபிள் மூலம் அந்த சிலைக்குள் அமைத்தார். அப்போது சிலையில் இருந்து புறப்பட்ட காஸ்மிக் கதிர்கள், ரேடாரில் இருந்து வானவீதியில் பரவி கொண்டிருந்த ரேடியோ அலைகளை எரித்தது. விளைவு ரேடார் இயங்கிக் கொண்டிருந்தாலும், ரேடியோ அலைகள் வானில் இல்லாததால்(எரிக்கப்பட்டு விட்டதால்) கண்ணெதிரே விமானம் வானில் தெரிந்தாலும் ரேடார் திரையில் இருந்து அது மறைந்து போனது.

சந்துருவை வெகுவாக பாராட்டிய ராணுவம் இது எப்படி சாத்தியமானது? என்றனர். அதற்கு சந்துரு “ இந்த சிதம்பரம் நடராஜர் சிலையின் வடிவத்திற்கும் இயற்பியலுக்கும் நிறைய ஒற்றுமை உள்ளது. கடவுள் துகள் (Gods Particle) என்னும் மிக பெரிய ஆராய்சியில் ஈடுபடும் எங்களுடைய CERN எனப்படும் ஐரோப்பிய அணு ஆராய்சி கழகம், சிதம்பரம் சிலையின் முக்கியதுவம் கருதி ஜெனிவாவில் உள்ள எங்களுடைய தலைமையகத்தின் முகப்பில் ஒரு பெரிய நடராஜர் சிலையை நிறுவியுள்ளோம். காஸ்மிக் கதிர்களை உமிழும் இந்த சிலையில் நாம் ஏற்படுத்தும் சில மாற்றங்கள் பிரபஞ்சத்தில் மிக பெரிய மாற்றத்தை உருவாக்க முடியும் என்பது நாங்கள் கண்டறிந்த உண்மை.

அதைத்தான் நான் இப்போது நிருபித்துக் காட்டி உள்ளேன். ஆனால் இத்திட்டம் சரியாக செயல்படவேண்டுமெனில் சாதகமான வானிலையும், கொஞ்சம் அதிர்ஷ்டமும் தேவை” என்றார்.
அதற்கு ராணுவம்“ நீங்கள் கவலை படவேண்டாம், உங்களுடைய முழு முயற்சியையும், எங்களுடைய முழு வீரத்தையும் பயன்படுத்தி இந்த ஆபரேஷனை வெற்றி பெற செய்வோம்” என்று சூளுரைத்தது.

இந்திய அரசு கேட்டுகொண்டபடி இந்த ஆபரேஷனுக்கு சந்துரு “தாய் மண்ணே வணக்கம்” என பெயரிட்டார் (பக்கத்துக்கு நாட்டு காரனுக்கு நம்ம மொழி புரியாது இல்லையா)

திட்டமிட்டபடி இந்திய எல்லைக்கு அருகில் சிதம்பரம் நடராஜர் சிலை நிறுவப்பட்டது. தாய் மண்ணே வணக்கம் ஆபரேஷன் தொடங்கியது.
சந்துரு எதிரி நாட்டின் ரேடாரை செயல் இழக்க செய்த அதே நேரத்தில், கடல் வழியாக நீர் முழ்கி கப்பலில் இந்திய கடற்படை வீரர்கள் அரேபியன் கடலில் தீவிரவாதிகளின் முகாமை நெருங்கினர்.

நீர் முழ்கி கப்பலின் மேற்பகுதி ஒரு முதலையின் தோற்றத்தை போல் வடிவமைக்கப்பட்டிருந்தது. முதலை நீரில் நீந்துவது போல் நீரின் மேற்பரப்பில் தெரிந்தாலும், அதன் கீழ் இருந்த நீ.மூ. கப்பலில் சில வீரர்களும், அனிமேஷன் வீடியோ கேம் ப்ரோக்ராமர் செல்வி.கிளாராவும் இருந்தனர். முதலையின் முதுகில் இருந்து ஒரு மெல்லிய குழாய் மேல் நோக்கி படர்ந்தது. அதன் முனையில் இருந்து ஒரு சிறிய ப்ரோஜெக்ட்டர் விரிந்தது. இவை யாவும் நீரின் நிறத்தை போல் வண்ணமிடபட்டு கண்ணுக்கு தெரியாமல் (invisible) இருந்தது. ப்ரோஜெக்ட்டரில் இருந்து நிலப்பரப்பில் பரவிய வண்ண கதிர்களில் இருந்து ராணுவ வீரர்களை போல 20 மெய்நிகர் (virtual) ராணுவ வீரர்கள் தோன்றினர். ( இந்த virtual iamge என்பது – சங்கரின் ஜீன்ஸ் படத்தில் “கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா, கண்களுக்கு சொந்தமில்லை” என்று ஐஸ்வர்யா ராய் ஆடி பாடுவாரே அதை போன்றதுதான் இது)

அந்த மெய்நிகர் ராணுவ வீரர்கள் தீவிரவாதிகளின் கூடாரத்தை நெருங்கினர். தம்மை யாரோ நெருங்குவதை உணர்ந்த தீவிரவாதிகள் அந்த மாயா பிம்பத்தை (மெய்நிகர் ராணுவ வீரர்களை) உண்மையான ராணுவ வீரர்கள் என்று நினைத்து துப்பாகியால் சரமாரியாக சுட்டனர். சட்டென அந்த மெய்நிகர் ராணுவ வீரர்கள் (virtual image) வேறு ஒரு திசை நோக்கி ஓட ஆரம்பித்தனர். செல்வி. கிளாரா கப்பலில் இருந்தபடி அதை திறம்பட இயக்கி கொண்டு இருந்தார்.

ராணுவ வீரர்கள் பயந்து ஓடுவதாக நினைத்து தீவிரவாதிகள் அவர்களை (மாய பிம்பங்களை) துரத்தினர். வெகு தொலைவில் ஒரு கருங்கல் அறை தெரிந்தது. அந்த கருங்கல் அறையும் ஒரு மாய (virtual) பிம்பமே. கிளாரா வின் மற்றுமொரு கைவண்ணம் அது. அந்த அறைக்குள் 20 ராணுவ வீரர்களும் ஓடி ஒளிந்து கொண்டனர். அந்த கருங்கல் அறையை தீவிரவாதிகள் துப்பாக்கியால் துளைத்தனர். கைவசமிருந்த தோட்டாகளை முழுவதுமாக தொலைத்தனர்.

அதே வேளையில் உண்மையான ராணுவ வீரர்கள் வேறு ஒரு திசையில் சிறிய ரக விமானங்களில் வந்து அவர்களுடைய முகாமில் இருந்த எல்லா ஆயுதங்களையும் பறிமுதல் செய்து விட்டு, தீவிரவாதிகளின் வருகைக்காக அங்குள்ள மறைவில் காத்து இருந்தனர்.

களைத்துப்போன தீவிரவாதிகள் அந்த கருங்கல் அறையை நெருங்க, சட்டென மெய்நிகர் (virtual) கருங்கல் அறை மாயமாய் மறைந்து போனது.

குழப்பமடைந்த தீவிரவாதிகள் செய்வதறியாது திகைத்துப் போய் நின்றனர். கப்பலில் இருந்த கிளாரா கிளவராக வேலை செய்து கொண்டிருந்தார். இதில் ஏதோ சதியுள்ளளது என்று சந்தேகப்பட்ட அவர்கள் தங்கள் முகாமுக்கு விரைந்தனர்.

அதற்குள் அந்த முகாமோ இருந்த இடம் தெரியாமல் அழிக்கபட்டிருந்தது. ஆயுதங்கள் இல்லாமல் நிராயுதபாணியாக களைத்து நின்ற தீவிரவாதிகளை அங்கு மறைந்து இருந்த இந்திய படையினர் நம் நாட்டிற்கு இழுத்து வந்தனர்.
அந்த ராணுவ குழுவுக்கு தலைமை வகித்த பிரிகேடியர் அப்துல்லா, ராணுவ தளபதியிடம் “சார் இவனுகளை இங்கேயே சுட்டு கொன்னுடுலாம்” என்றார். ராணுவ தளபதியோ “வேண்டாம், மினிஸ்டர் கிட்ட பேசிட்டேன், இவனுகளை நாம கொல்ல கூடாது” என்றார்.


அப்துல்லாவோ “வேஸ்ட் எல்லாம் வேஸ்ட், கஷ்டப்பட்டு இவனுகளை நாம புடிச்சிருக்கோம், ஆனா நம்ம ஜனநாயகம் இந்த கொலைகாரனுகளை பாதுகாப்பா ஜெயில்ல வைக்க சொல்லும். வேளா வேளைக்கு கறி சோறும், சப்பாத்தியும் கொடுத்து பத்திரமா பாத்துக்கணும் இல்ல, 20 வருசத்துக்குக் மேல இவனுகளுக்கு தண்டசோறு போட்டு பல கோடி செலவு பண்ணனும், அதுக்குள்ள எவனாவது ப்ளைட்ட ஹாய்ஜாக் பண்ணி இவனுகளை ரிலீஸ் பண்ண சொல்லி மிரட்டுவாணுக, நாமலும் பத்திரமா டாடா சொல்லி அனுப்பி வச்சுருவோம். நாம பட்ட கஷ்டமெல்லாம் வீணா போயிரும். தேவையா இது? இப்பவே இவனுக கதையை முடிச்சிருவோம் சார்” என்று ஆவேசப்பட்டார்.
அதற்கு ராணுவ தளபதி “ பொறுமையா இருங்க, இவனுக சாக போறது உறுதி. ஆனா நம்ம கையால இல்ல”

“பின்ன யாரால?” அப்துல்லா ஆதங்கபட்டார்.

“அவனுக நாட்டு ராணுவமே இவனுகளை கொன்னுரும்” பதிலாய் புதிர் போட்டார் ராணுவ தளபதி.

“எப்படி?” ஆச்சரியமாய் கேட்டார் பிரிகேடியர் அப்துல்லா.

“இந்த ரகசியம் உங்களுக்கு தன்னால புரியும்” மீண்டும் புதிராய் பேசினார் ராணுவ தளபதி.

சியாச்சின் மலை முகடுகளில் எதிரி நாட்டு ராணுவம் நம்மை தாக்குவதற்கு தக்க நேரத்தை எதிர் பார்த்திருக்கும் சமயம் அந்த இடத்திற்கு தீவிரவாதிகள் கொண்டு செல்லப்பட்டனர்.

தீவிரவாதிகளின் உடைகளை களைந்து ராணுவ சீருடை அணிவிக்கபட்டு, பின்பு ஓவ்வொரு தீவிரவாதியும் ஒவ்வொரு பாரா மோட்டார்சில் அமர்த்தி எதிரியின் இருப்பிடத்திற்கு வான் வழியாக அனுப்பி வைக்கபட்டனர்.

எதிரி நாட்டின் வான் எல்லைக்குள் பறந்து வந்த தீவிரவாதிகளை இந்திய ராணுவம் என தவறாக நினைத்து அனைவரையும் சுட்டு வீழ்த்தியது அவர்கள் நாட்டு ராணுவம். கீழே இறந்து கிடந்த தீவிரவாதிகளின் உடல்களை அந்நாட்டு ராணுவம் சோதனை இடும்போது தீவிரவாதிகள் அணிந்திருந்த உடைகளுக்குள் ரகசியமாக ஒரு பேனா இருப்பதை எடுத்து தங்களுடைய ராணுவ தலைமைக்கு தகவல் தெரிவித்தனர்.

“முட்டாள்களே! அது பேனா அல்ல spy bunkers detector ஆக இருக்கலாம் இது நம்முடைய பதுங்கு குழிகளை கண்டுபிடிக்க இந்திய ராணுவம் செய்யும்தந்திரம்” என அவர்களுடைய ராணுவத் தலைமையிடமிருந்து தகவல் வந்தது. அதற்குள் ஒரு ராணுவ வீரன் அந்த பேனா மூடியை திறக்க ………..

சோடியம் சயனைடு என்னும் ரசாயன குண்டு வெடித்து சிதறியது. சோடியம் சயனைடு என்பது ஒரு வெள்ளை நிற படிகம். அது காற்றில் உடனடியாக பரவி அந்த காற்றை சுவாசிப்பவருக்கு மரணம் நிச்சயம். அந்த சோடியம் சயனைடு உடலுக்குள் புகுந்து ஆக்சிஜனை தடை செய்து எதிரி நாட்டின் மொத்த ராணுவ வீர்ர்களும் சத்தமின்றி செத்தனர்.

ஆகஸ்டு 15 2015டெல்லி செங்கோட்டையில் பாரத பிரதமர் மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இயற்பியல் பேராசிரியர் சந்துருவுக்கு தேசிய விஞ்ஞானி விருதும், கிளாராவுக்கு தேசிய விருதும் இந்திய ராணுவத்தில் கௌரவப் பதவியும், பிரிகேடியர் அப்துல்லாவுக்கு மேஜர் ஜெனரலாக பதவி உயர்வும் வழங்கப்பட்டது.

செல்வி. கிளாராவுக்கு பதக்கம் அணிவிக்கும் போது பாரத பிரதமர் மெல்லிய குரலில் “நீங்க நிஜமாவே கிளாராவா? இல்ல கிளாரா மாதிரி இருக்கிற விருட்சுவல் இமேஜ்ஜா? ” என புன்னகையோடு கேட்டார்.

அந்த பெண்மையின் முகத்தில் சாதனை புன்னகை மென்மையாக வந்து போனது.

எழுதியவர் : முரளி (26-Jan-16, 12:23 am)
சேர்த்தது : ஸ்ரீனி முரளி
பார்வை : 195

மேலே