வெண்பா புதிது

           வெண்பா புதிது

என்னை அறிந்தாய் வாழ்கடலில் உப்பென்றாய்
என் மீது புறம் பேசினாய்..இன்றும்
தீயாய் வெகுண்டாய் என்னில் குறையென
ஊடினாய் என் உள்ளம் உறை

என்னை அறிந்ததும் குற்றப்போர் நடத்தியும்
எங்கெங்கிலும் துன்பம் தீர்த்தும்...இன்று என்னைக்
கைவிடாமல் காத்ததும் இல்லத்தில் உறைந்ததும்
மெய்யென வாழ்க்கை இல்

வெற்றி யில் தோல்வியில் வானோர் போற்ற
தீர்ந்ததில் இல்லாள் இன்பத்தில் ...ஊறித்
திளைத்ததில் குற்றத்தில் பொறுத்தும் மறந்தும்
தொலைந்ததில் வாழ்வே துனை

உன்னையன்றி ஒருவரையும் காண்கிலேன்
பின்னை யாரோடும் பின்செல்லேன்...தன்னம்பிக்கைக்
கொண்டே உனையே தொடர்ந்து வந்திடுவேன்
தலைவா...உன் நிழலே

எவ்வுலகம் தோன்றில் உன் முகம் தோன்றும்
எதற்கும் அஞ்சேல் உருவம் தோன்றும் ...நெஞ்சமதில்
உனை நினைக்கையில் எக்காலமும் தோன்றும்
தலைவா..என்று சொல்வார் முன்

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (29-Jan-16, 4:50 am)
Tanglish : venba puthithu
பார்வை : 168

மேலே