தமிழ்த் துரோகியே மரணித்திடு

'உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு
இதை உரக்கச் சொல்வோம் உலகுக்கு'

;வீழ்வது நாமாக இருப்பினும்
வாழ்வது என்றும் தமிழாகட்டும்'

'தமிழனென்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா' என

வீர வசனம் பேசிக் கொண்டே
சமுதாயத்தை ஏமாற்றிப் பிழைக்கும்
நயவஞ்சகக் கூட்டத்தின்
போலி வேஷத்தைக் கிழித்தெறிந்து
அப்பாவி மக்களின் முன்னிலையில்
திரை போட்டுக் காட்டுவோம்.

அப்பாவி மக்க்களின் அப்பாவிதனத்தைத்
தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு
தமிழர் உணர்வின்பால் தாண்டவமாடும்
தமிழ் துரோகிகளின் குறுட்டுத் தைரியத்தை
முளையிலேயே கிள்ளுவோம்.

தமிழ் எங்கள் மூச்சு
நாம்தான் தமிழை வளர்ப்போம்
நாம்தாம் தமிழை வளர்க்க வேண்டும்
தமிழனாய் பிறந்து என்னத்தைச் சாதித்தோம்
நம் பிள்ளைகளைத் தமிழ்ப் பள்ளிக்கே அனுப்புவோம் என்று
மேடைதோறும் உணர்ச்சிப்பொங்க
வசனம் பேசிய வேடதாரிகள்
கடலென பரந்துகிடக்கும் தமிழரின்
கரவோசை ஓய்ந்து வீடுசென்றதும்
குடும்பத்தாருடன் கொஞ்சிப் பேசுவது
'தஸ் புஸ்' ஆங்கிலத்தில்.
ஊருக்குத்தான் இந்த வீர உபதேசம்
வீட்டுக்குள்ளே ஆங்கில மோகத்தில் உல்லாசம்.

தமிழ் தமிழ் என்று உரக்கக் கூவி
தமிழையே கூறுபோடும் கூட்டம் ஒருபுறம்.
மேலைநாட்டு மோகத்தின் போதையில்
தமிழ்ப் பண்பாட்டைப் புதைகுழிதள்ளி
இன்பங்காணும் கூட்டம் இன்னொருபுறம்.
பணத்தாசை பேராசையாகி இறைவாசல்தோறும்
இறைவனையே விலைபேசும் ஆன்மீகவாதிகள் வேறொருபுறம்.

தமிழ் அழியுது பாரட - நம்
செந்தமிழ் அழியுது பாரட.
மூவேந்தர் கட்டிக்காத்த தமிழடா
இன்று முச்சந்தியில் நிற்குதே ஏனடா?

தமிழுக்கும் பண்பாட்டுக்கும்
ஏனிங்கு இன்றிந்த அவலம்?
தமிழ் வளர்ந்த முறை சரியில்லையா?
தமிழை வளர்த்த முறைதான் சரியில்லையா?
தொன்றுதொட்டு தமிழ் வளர்த்தோர் சரியில்லையா?
இன்று தமிழை வளர்க்கிறோம் எனக்கூறும் தமிழர் சரியில்லையா?

ஆகமொத்தத்தில் இத்தரணியில்
சங்கம் வைத்துப் பேணிவளர்த்த தமிழும்
கண்ணிமைக்காமல் காணக்கிடந்த கலையும்
காலங்காலமாய்க் கட்டிக்காத்த கலாச்சாரமும்
பண்டைய நாகரீகத்தில் உரமேறிய பண்பாடும்
கண்டவர் நகைத்திடக் காரணமென்ன?
காரணக்கர்த்தாதான் யார்?

தமிழ் சோறு போடுமா என்ற எண்ணமா?
தமிழைப் படிச்சி எதைக்கிழிக்கப்போறோம் என்ற வெட்டிப்பேச்சா?
அதிகாரத்தால் ஆணவத்தாண்டவமாடும் அரசியல்வாதிகளா?
ஆணவத்தால் ஆசிரியரை அடக்கியாளும் தலைமையாசிரியரா?
அக்கறையின்றி வயிற்றுப்பிழைப்புக்காகக் கோலெடுத்தாடும் ஆசிரியரா?
பொறுப்பின்றி நாளெழுத்துப் படிச்சாபோதுமெனும் பொறுப்பற்ற பெற்றோரா?
எதைப் படிச்சி எதைக் கிளிக்கப்போறோமெனும் சோம்பேறிப் பிள்ளைகளா?

அதிகாரத்தால்!
ஆணவத்தால்!
அக்கறையின்றி!
பொறுப்பின்றி!
நம்பிக்கையின்றி!
இத்தரணியில் நடமாடும் ஜடங்கள்
குறைந்தபட்சம் திருந்தனும்!
அதிகபட்சம் விரைவில் மரணிக்கனும்!

எழுதியவர் : திரு. முபா.செல்வா24, ஷா ஆலாம (19-Feb-16, 7:58 am)
பார்வை : 126

மேலே