பெருமை

செடியில் ஒரு பூ பூக்கும் போது
செடிக்கு பெருமை
மண் மீது மழை பெய்யும் போது
மண்ணுக்குப் பெருமை
நிலத்திலிருந்து முளை விடும் போது
விதைக்குப் பெருமை
வளைந்து நெளிந்து ஓடும் போது
அருவிக்குப் பெருமை
மரத்திலே குருவி கூட்டில் வாழும் போது
மரத்துக்குப் பெருமை
வானத்தில் மின்மினிகள் ஒளிரும் போது
வானுக்குப் பெருமை
முத்து உள்ளே இருக்கும் போது
சிப்பிக்கு பெருமை
சரித்திரம் ஓன்று புத்தகம் ஆனால்
நூலுக்குப் பெருமை
மனிதம் கொண்ட மனிதன் வாழ்ந்தால்
உலகுக்கு பெருமை

எழுதியவர் : பாத்திமாமலர் (19-Feb-16, 11:54 pm)
Tanglish : perumai
பார்வை : 371

மேலே