குறள் வடிவக்கவிதைகள்-1

1) ஒரு செயல் எக்கடினமாயினும் விருப்பங்கொண்டால்
வலி அறியாது மனம்.
2) பின்னிய குழலினும் மின்னும் அணியினும்
முகநகையே மகளிர்க்கு அழகு.
3) திறவாக்கதவினால் இல்லம் புகலாகாது உதவா
குணத்தினால் பிறர் உள்ளங்கவரலாகாது.
4) வெள்ளம் வாரா நிலமும் கள்ளமில்லா
மனமும் எவராலும் விரும்பப்படும்.

எழுதியவர் : வெங்கடேஷ் PG (21-Feb-16, 9:33 pm)
பார்வை : 90

மேலே