நித்தமும் உன் மௌனத்தால்....................
![](https://eluthu.com/images/loading.gif)
உன்னிடம் சொல்லாத
வார்த்தைகள் இன்னும்
நிறைய உண்டு
தவறுதலாக
நான் சொன்னதும்
தவறாமல் நான் சொல்ல
நினைத்ததும்
இன்றும்
நினைக்கிறேன்
உன்னை நினைக்கும்
போதெல்லாம்
அந்த வானம்
சாட்சியாக உன்
நெற்றியில் நான் வைத்த
குங்குமம் கரைந்ததோ
என்ன
உன்னால்
நான் கரைகிறேன்
நித்தமும்
உன் மௌனத்தால்......