கூட்டுப்பறவை இவன்

கூட்டுப்பறவை இவன்!!
--------------------------------
வளம் இழந்த பூமியாய்
நல்லுளம் அற்றுப் போய்
வான்பார்த்த வரண்ட நிலமாய்
மற்றவர் கை பார்த்து
மானமற்று கிடக்கிறாய் நீ!!

முயன்று உன் நிலையை
முன் கொண்டு செல்லாமல்
என்று வரும் என் வாழ்வென்று
தன் மனை முகடு பார்த்து
தரிசியாய் கிடக்கிறாய் நீ!!

மற்றவன் வாய் பார்த்து
அவன் ருசிக்க
இவன் எச்சில் விட்டு
கிடக்கும் இவனிலை காண
எம்மினம் வெற்கித்துக் கிடக்கிறது!!

சிதைந்த உன் வாழ்வை
சிறப்பாய் சீர் தூக்க
சினந்தெழுந்து நின்று
விழுந்ததை எண்ணிப் புலம்பாமல்
ஏன் உனால் துணிந்தெழ முடியவில்லை!

தன் நிலை விழுந்ததற்காய்
ஏன் தன்னிலைகள் உதிர்ந்ததற்காய்
சோர்ந்து போய் நின்றிடாமல்
துளிர்த்துத் தன் புது வாழ்வை
தொடங்கும் மரம் நீ காணவில்லை?

மற்றார் கை எதிர் பார்க்கும்
கூட்டுப் பறவையாய் நீ இல்லாமல்
சுதந்திரனாய் உலா வந்து
கொட்டிக் கிடக்கும் வளமதனை
பெற்றுண்ணும் பறவையாய் மாறாயோ!!

ஜவ்ஹர்

எழுதியவர் : ஜவ்ஹர் (27-Feb-16, 7:45 am)
பார்வை : 149

மேலே