நடமாடும் நதிகள் -25 ப்ரியா
 
 
            	    
                வெட்டியக்கோடாரியில்
காயா ஈரம்
மரத்தின் கண்ணீர்
_________________________________________ 
மழையை பூமிக்கு தூதனுப்பி
காத்திருக்கிறது காதலோடு 
வானம்
__________________________________________
தினமும் என்கைபட்டே 
உன் ஆயுள் குறைகிறது
நாள்காட்டி 
__________________________________________
நிலவழகியின் சிரிப்பில்
சிதறிய முத்துக்கள் 
நட்சத்திரங்கள் 
___________________________________________
இரவும் பகலுமாய் 
கண்ணாமூச்சி ஆடுகிறார்கள் 
சூரியசந்திரன் 
____________________________________________
கல்யாண மண்டபத்தில் 
கவலையோடு நிற்கிறது
கன்றைபிரிந்த வாழை
____________________________________________
நித்திரை மேடையில்
நடக்கும் நாடகம் 
கனவு
_____________________________________________
பணம் சேர்க்க வேலைதேடினான் 
வேலையில் சேர பணம் தேடுகிறான் 
லஞ்சம் 
_____________________________________________
நேற்றைய சருகுகளின் உதிர்வில்
இன்றைய தளிர்களின் கண்ணீர் 
மரணம் 
_____________________________________________
தன் சொந்தங்களை  இழந்து
தனியே தவிக்கிறது
இலையுதிர்காலமரம்.
______________________________________________             
தோழர் ஜின்னா 
ஓவியர் காளிதாஸ் 
முரளி ஐயா மற்றும் தோழர் ஆண்டன் பெனி
ஆகியவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்
 
                     
	    
                

 
                                