நான் செல்வியாகப் போறேண்டி
ஏய் தேன் மொழி நான் செல்வியாகப் போறேண்டி.
=
என்னடி சொல்லற கஜலட்சுமி? செல்விங்கற சொல்லு வடமொழியில் குமாரின்னு சொல்லற சொல்லுக்கு இணையானது. திருமணம் ஆகாத பெண்ணின் பேருக்கு முன்னாடி அந்த ரண்டு சொல்லிலெ எதோ ஒன்னச் சேத்துப் போட்டுக்கறது வழக்கம். நீ தான் திருமணம் ஆனவள் ஆச்சே. செல்வின்னா பணக்காரிங்கற அர்த்தமும் இருக்கு. என்ன எதாவது திடீர்னு சொத்து இல்லன்னா லடசக்கணக்கிலே பெரிய தொகையாகக் கெடச்சிருக்கா?
=
ஆமாண்டி நான் திருமணம் ஆனவதான். ஆனா எங் கணவரைப் பிரிஞ்சு தானே 2 வருசமா வாழ்ந்திட்டு இருந்தேன். நான் இன்னிக்கு நம்ம கூட வேலை பாக்கற அத்தனை பேருக்கும் இனிப்பு குடுத்தேனே, ஏன்னு தெரியுமா?
==
தெரியாதடி கஜா. என்னன்னு நீயே சொல்லடி.
==
எங் கணவரோட அனுசரிச்சுப் போக முடியுமா தான் நா அவர் மேலே வழக்குப் போட்டேன்.நா அத உங்கிட்டக் கூட இதுவரைக்கும் சொல்லாம மறச்சேன். நா நேத்து வராததுக்குக் காரணம் நா போட்ட வழக்கிலே தீர்ப்புச் சொன்ன நாள் நேத்துத்தான். எனக்கு சாதகமாக (விவாகரத்து) மணமுறிவு குடுத்தாங்கடி. பாவம் அந்த மனுசன் தலையத் தொங்கப் போட்டுட்டு அழுதிட்டே போனாரு. நா மகிழ்ச்சியா நீதி மன்றத்தை விட்டு வெளிலெ வந்தேன். அதுக்குத் தான் இன்னிக்கு எல்லாருக்கும் இனிப்புக் குடுத்தேன். மத்தவங்களுக்கெல்லாம் வீட்டிலே ஒரு விசேசம்-ன்னு சொல்லி இனிப்புக் குடுத்தேன். ஆனா நீ என்னோட உடன்பிறவா உயிர்த் தோழி. அதனால தான் நா நடந்த உண்மையை உங்கிட்ட மட்டும் சொல்லறேண்டி. இனிமே நான் மறுமணம் ஆகற வரைக்கும் செல்வி. கஜலட்சிமி -டி. அதானல தான் நா ரொம்ப மகிழ்ச்சியா இருக்கறேண்டி.
=
என்னடி சொல்லற? மறுமணங்கறது என்ன வெளையாட்டுத் தனமான விசயம்னு நெனச்சிட்டயா?
==
போடி தேன்மொழி. நா நல்ல வேலைல இருக்கறேன். கை நிறையச் சம்பளம் வாங்கறேன். மறுமணம் ஆனா என்ன ஆகாட்டி என்ன?
==
போடி கஜா. நா எதுவும் சொல்லறதுக்கில்ல. எல்லாந் தலையெழுத்து. நான் உன்னோட தோழியாப் போனது தப்புடி. எம் பேச்ச எப்பவாவது கேட்டிருக்கறயா? அடக் கடவுளே!