ஏழு கவிதைப் பூக்கள்

* மீண்டும் குழந்தையாய்
முதுமை வந்ததும்.
*சின்னஞ் சிறிய விஷயங்களையும்
அதிசயமாய் பார்க்கிறது
குழந்தை பருவம்!
அதிசயமான விஷயங்களையும்
சின்னஞ் சிறியதாய் பார்க்கிறது
வளர்ந்த பருவம்!
*பிறப்பு என்பதும்
இறப்பு என்பதும்
மனிதனின் கற்பனைகளே!
உண்மையில் நிகழ்வதெல்லாம்
உருமாற்றம் மட்டுமே!
*இரவு மட்டும் இல்லை
பகலும் அமைதியாகத்தான் இருக்கும்
மனிதர்கள் யாரும்
இல்லையென்றால்.
*சின்னஞ் சிறிய கல்
கீழே விழுகிறது
பிரம்மாண்ட பூமி
அந்தரத்தில் மிதக்கிறது!
* அங்கும் இங்கும் முட்டி மோதி
தாண்டி விட நினைக்கிறது
தன் கன்னாடிச் சிறையை
தொட்டி மீன்கள்.
*எப்போதும் நிற்காத காலம்
நின்றுவிட்டது...!
ஓடாத கடிகாரத்தில்.
________________________________________________________________________________________________
ManivannanGallery.BlogSpot.Com