ஹைக்கூ

காதலை சொன்ன கள்வன்
யாரோ ?
சிவந்த அந்திவானம் !

கரணம் தப்பினால்
மரணம்
கருவறை காலம் !

உன்னை விட
அதிகம் சிவக்கின்றன
மருதாணி கைகள் !

சொர்க்கம் கண்ட
நாட்கள்
தாய்மடி உறக்கம் !

எழுதியவர் : தங்கதுரை (14-Mar-16, 5:41 pm)
Tanglish : haikkoo
பார்வை : 383

மேலே