நீயே வெட்டிக்கொள்ளடா - சந்தோஷ்

அவன் ஒரு மனுசியை தானே காதலித்தான்
அவள் மனிதனைத் தானே மணம் புரிந்தாள்.

புத்தி கெட்டவனுக்கு சாதி வெறி
கத்தி எடுத்தவனுக்கு ரத்த வெறி.
கட்சி நடத்துபவனுக்கு பதவி வெறி.
கவிதை எழுதும் எனக்கு மட்டுமே
என்னைப் போன்றவர்களுக்கு மட்டுமே
பொங்கியெழுகிறது ஒரு விநோத வெறி..!

இந்தப் பேனாவினால்...
ஜாதி கலந்த காற்றைச் சுவாசிக்கும்
இந்த தேசத்தை திருத்த முடியாது
இந்த தேசத்தில் மனிதர்கள் வாழவில்லை.
இந்த தேசத்தில் மனிதமும் பிழைக்கவழியில்லை.
இந்த ஜாதிப் பிண்டவாசிகள் மீது
குறைந்தப்பட்சம்..
காறி உமிழ...............
என் பேனா எதையாவது எழுதி தொலையட்டும்..
ஜாதி ஒழிக என்றாவது... !
**


பல ஜாதிகாரன்களின்
வியர்வை சமத்துவமாய் ஒடியது
விபச்சாரியின் யாக்கையில்..!
**
சங்கரை வெட்டிய அரிவாளை
உருவாக்கியவனின் ஜாதி
வெட்டியவன் ஜாதியா ?
**
ஜாதி மறுப்புக்கு தீர்ப்பு
அரிவாள் வெட்டுத்தான் என்றால்...
அந்த அரிவாளைக் கொண்டு
நீயே வெட்டிக்கொள்ளடா
உன் மயிரை...!
**
இரா.சந்தோஷ் குமார்.

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (16-Mar-16, 7:08 pm)
பார்வை : 184

மேலே