பன்றி இறைச்சி

மலம் பூசி விலங்குகளை
மேய்த்து வீடு திரும்பும்
அப்பா ....
குறவன்கூடை விற்று திரும்பிய
அம்மா ....
சற்று முன் வரை
அழுக்கு ஆடையால்...
கர்ப்பு அரண் அமைத்துக்கொண்ட
கருப்பு குறத்தி மகள் ..
வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டிருப்பதாய்
வயதிற்கு வந்த பெண்ணை
வறுமைக்கு திருமணம் கட்டி கொடுப்பார்கள்
பழங் கிழத்துக்கு ...
இளங் கிழத்தியை
மணமுடிப்ப துண்டு ...
கடா பன்றிகளை
விற்று ஊ திய உயர்வு
அடைந்தாக வேண்டும்
நல்ல வேலை
சிங்கம் ஒரு குட்டி
பன்றி பலகுட்டி ..
மலவாசனையுடன்
மண்வாசனையும் வீச
குட்டி பையன்
பன்றி தொட்டியை எட்டிபார்ப்பான் ..
பொழுதுபோக்கு .......
தேர்தல் வரும் பின்னே
இவர்கள் வருவார்கள் முன்னே
அதுவரையில் பெரும் சாதி காரர்கள்
அங்கு வருவதே இல்லை....
ஹமாம் , சோப்பு 50 ரூபாய் பணத்தோடு
சில அம்பலம் [தலைவர் ]
அரைகிளுக்கும் அவலமும் நேரும் ..
ஊருக்கு ஒதுங்குபுரத்திலும்
இவர்கள் ஒதுங்கி பிழைக்க வேண்டுமாம் ..
மாரி ,சுப்பன் ,குப்பன் .மடன்
இங்க வாங்கடா
என அழைக்க....
பண்ணையார் இவர்களை
பக்கத்தில் வைத்துக்கொள்ளுவார்
அய்யா அய்யா என்று
கூலகும்புடு போட்டு..
காலம் கழியும் ....
இப்படி அவர் கதை கேட்டு
பன்றிக்கறி புசிக்க தொடங்கினேன் ...

எழுதியவர் : (20-Mar-16, 9:58 pm)
பார்வை : 55

மேலே