காலம் போட்ட கோலமிது

விண்வெளியில் வீற்றிருக்கும் வெண்ணிலவே...
வெட்ட வெளியில் வெந்துவிட்ட
விலை போகா வெற்றிலை நான்....!
என்மீது காதல்கொண்டு நீ
ஏங்கித்தவிப்பது முறைதானோ..?
பாதைதோரும் பாரம் சுமக்கும்
பட்டமரம் என்னோடு....
பால்போன்ற உன் வாழ்வு இணங்கலாமோ...?
விண்ணும் மண்ணும் வாய்பிளக்க
பல சாதனை படைக்கப் பிறந்தவளே....!
சல்லடை கொண்டு என் நினைவுகளை
சலித்துவிடு அடியோடு....!!
கலங்கமற்ற பிறைநிலவே....!
காதல் வேண்டாம் என்னோடு......
எனை கானல் நீராய் நினைத்துக்கொண்டு
உன் காதல் பயணத்தை முடித்துவிடு.....!!
-சதீஷ் ராம்கி.