சலாவு 55 கவிதைகள்
அன்பே,
நான் இவ்வுலகில் காணும்
யாவும் நீயாக வேண்டும் ..
உன் கதலையன்றி வேறெதுவும்..
என்னை ஆட்சி செய்திட வேண்டாம்..
பல கதைகள் பேசி ..
பழகி சென்ற நாட்கள் எங்கே ..
சில நினைவில் என்னில் ..
தைத்த முட்கள் இங்கே ..
இனி வாராதோ ஒரு பொழுதும் ..
பிணி தீராதோ மறுபொழுதும் ..
என் நெஞ்சில் வைத்து அழும் பொழுதும் ..
உன் நினைவுகளே எப்பொழுதும் ..
சென்றடைய வழி இல்லை இலக்கை ..
நீயின்றி முடிவில்லை வாழ்க்கை ..
நான் செத்து பிழைக்கும் நேரம் மட்டும் ..
போதும் உன் கண்ணீர் துளிகள் சொட்டும் ..
......
...................சலா,