நிறம் பெறுகிறது நிலா 1

கார்காலக் கனவாகக்
*** கண்மொழியில் கூடுவது ?

கற்பனையின் ஊற்றாக
*** கவிமொழியில் பாடுவது ?

தீராத இன்பமென
*** தேன்மொழியில் வாடுவது ?

பார்கின்ற பொழுதினிலே
*** பனிமொழியில் நாடுவது ?

தனியான பொழுதினிலே
*** தாய்மொழியில் சாடுவது ?

இன்பமிது என்றுசொல்லி
*** எம்மொழியும் எழுதுவது ?

*
*
*

இயற்றாத கவிஞனில்லை
இல்லாத உலகமில்லை - இதைப்

பாடாத புலவனில்லை
பழகாமல் வருவதில்லை - என்றும்

சுவையான சொந்தமிது
சொல்லுவதால் புரிவதில்லை ...!



...1994

எழுதியவர் : மீ.மணிகண்டன் (6-Apr-16, 10:05 am)
பார்வை : 120

மேலே