நகரம்

"""""""
மழை காலம்
அடுக்குமாடி தொடர்வீடு
மெல்ல அணைச்சு
இழுத்து வந்து
வெளியே பார்""'
என்றது குளிர்காற்று!

விழுந்த தூவானம்
தந்த சிலிர்ப்பில்,
நேற்று தற்செயலாக
வாங்கிய ஸ்பரிசம்
வெட்க்கத்தோடு
சத்தமில்லாமல்
வந்துபோயின!

நகரத்து வன்மங்களை
கழுவி ,ஊத்தி ,துடைத்து,
வெள்ளை அடித்தது
விடலைமழை!

சில்லறைக்காசுக்கு
சாம்பிராணிப் புகைகள்
விலைபோய்
அங்காடிகளில்
துடக்குக்கழிக்கின்றன!

ஒற்றை குடையின்
இறுக்கமான
நெருக்கங்களும் !
உயர்ந்தபாதங்களின்
குதிரைக்குழம்பின்
ஓசையையும்!
பாதிஆடைகளின்
படபடப்புக்களையும்
காற்று பிடித்து வந்து
காதில் சேர்த்தது!

பண்டிகைகாலம்
புடவைகளின் தெரிவுகளில்
பொறுமைகள்
தோற்கடிக்கப்பட்டு
திருப்தியீனங்களில்
புலம்பல்கள் தொடர்கின்றது!

வாசலில் காத்திருப்புக்களின்
எல்லைமீறலில்
குளிர்பானங்கள்
வஞ்சிக்கப்படுகிறது!

தூரத்தே சிதறிய
மின்னல்ஒன்றில்!
பார்வைகள்
பற்றிக்கொண்டாலும்""""
கொழுந்து விட்டு எரிவது
என்னவோ இதயமே!!!

லவன்
"""''''’"""

எழுதியவர் : (9-Apr-16, 10:27 am)
சேர்த்தது : லவன்
பார்வை : 65

மேலே