ஆசைக் கொண்டேன்

ஆசைக் கொண்டேன்.....
கூந்தலில் நிறைய மல்லி சூடி...
கையில் வண்ண வளையல் பூட்டி...
பட்டுச் சேலை பளபளக்க...
நாணத்தில் முகம் சிவக்க...
உதட்டில் புன்னகை பூக்க...
மணமேடையில் மணப்பெண்ணாக....
ஆசைக் கொண்டேன்.....
தோழிகள் என்னை கேலி செய்ய...
நாணத்தில் என் இமைகள் படபடக்க...
என்னவனின் கை என்னை பற்ற...
அவன் அருகாமை என்னை மயக்குவதாய்...
ஆசைக் கொண்டேன்.....
என்னவனின் மூச்சுக் காற்றில் கலந்து
அவன் இதயம் தொட....
என் உயிராய் அவனும்...
அவன் உயிராய் நானும்...
இரு உயிர் ஓர் உயிராய் இணைய....
ஆசைக் கொண்டேன்.....
என்னவனின் மனம் நிறைந்த மனைவியாய்....
என்னவனின் பெற்றோர்க்கு நல்ல மருமகளாய்....
புகுந்த வீட்டின் குத்துவிளக்காய்....
அனைவர் மனதையும் கொள்ளை கொண்டு
வீட்டின் மகிழ்ச்சியாய் திகழ....
ஆசைக் கொண்டேன்.....
இணைந்த இந்த ஓர் உயிர்க்கும் ஓர் உயிராய்...
என்னவனின் ஜாடையில் என் குழந்தை
என் வயிற்றில் ஜனனம் கொள்ள....
ஆசைக் கொண்டேன்.....
என் குழந்தையின் வரவால் பொங்கும் மகிழ்ச்சி
வீடெங்கும் மின்ன...
என் குழந்தை என்னவனின் உருவாய்...
என் அருகில் என்னை மயக்கும்
புன் சிரிப்பை சிந்த.....
நான் இன்பக் கடலில் மூழ்க...
ஆசைக் கொண்டேன்.....
எத்தனையோ.....
என்னவனின் மனைவியாய்....
என் குழந்தையின் தாயாய்....
ஆனால்
என்ன செய்வது......
விதி.....
கானல் நீராய்...
நிறைவேறாத ஆசையை ஏந்திக் கொண்டு.....
இன்னும் நான் நானாக இருக்கின்றேன்.....
என் தாய் வீட்டில்.....
முதிர் கன்னியாய்....!