எழுத்தென்னும் ஓவியம்

எழுத்தும் ஒரு ஓவியமே
ஒவ்வொரு எழுத்தும்
நாம் உச்சரிக்கும் உச்சரிப்பில்
ஒலி வடிவம் பெறுகிறது
எழுத்துக்கள் சேர்ந்து சொல்லாகின்றது,
சொற்கள் சேர்ந்து வார்த்தைகள் உருவாகின்றன
வார்த்தைகள் ஒன்றுடன்ஓன்று இணைந்து
சொல்லாடல் உரையாடல் இசை பாடல்
என பல்வேறு வடிவம் கொண்டு
கதை கட்டுரை கவிதை சுரங்கள்
நாடகங்கள் நளினங்கள் கண்டு
பல்வேறு பரிணாமங்களில்
அரங்கேற்றப் படுகின்றது ,

எந்த அறிஞனுடைய ஆரம்பமும்
அவன் வரையும் ' அ' எனும் ஓவியத்தில் தொடங்குகிறது
அதுவே மனிதன் முதலில் வரையும்
வரலாறு படைத்திட போகும்
அருமையான அழகிய எழுத்தோவியம்,
அ வில் தொடங்கி அஹ் வரை
ஆயுள் எல்லாம் அவனுடனே
கைகோர்த்து நிற்கும் ஒப்பற்ற ஓவியங்கள் எழுத்துக்களே

ஒவ்வொரு எழுத்தும் மனிதனை ஆளுகின்றது
அதனால் தான் மனிதனும்
அறிஞன், கவிஞன், கலைஞன் ஆகின்றான்,
உலகை ஆட்சி செய்கின்றான்,
எழுத்து என்பது பிஞ்சுக் குழந்தையின்
பட்டு விரலால் வரைந்திடும்
முதல் ஓவியமாகும்,

மனிதன் எழுத்தை எப்போதெல்லாம் நேசிக்கின்றானோ
அங்கெல்லாம் மனிதம் வாழுகின்றது,
ஒரு மனிதனை முழு மனிதாக்குவது
இந்த ஒப்பற்ற எழுத்தென்னும் ஓவியங்களே
எழுத்தென்னும் ஓவியம்
அவன் எழுதும் கவிதையாகிறது ,
கட்டுரையாகின்றது , காவியமும் ஆகின்றது

எழுதியவர் : பாத்திமாமலர் (18-Apr-16, 11:41 pm)
பார்வை : 107

மேலே