10 செகண்ட் கதைகள் - திரைகடலோடி
அப்துல்லா ஊர்க்கதை பேசிக்கொண்டே காய்கறி நறுக்குவான்.
ஆல்பர்ட் கண்ணீர் விட்டுக்கொண்டே வெங்காயம் வெட்டுவான்.
அழகேசன் அரட்டை அடித்துக்கொண்டே ஆம்லெட் போடுவான்.
கூடியமர்ந்து சாப்பிடுகையில் நாளைய சமையல் குறித்தான விவாதத்தில்
காரம் சாரமிருக்கும்.
ஒரு போதும் அது குழம்பிலோ, குணத்திலோ இருக்காது.
.................
வெளிநாட்டு வாழ்க்கை - அது
இலக்கணமில்லாத ஆனால்
இணக்கமான கவிதை.