பல விகற்ப பஃறொடை வெண்பா

குழலென்றும் யாழென்றும் பாராமல் கொட்டிப்
பொழியும் மழையில் நிலைகுலைய நின்று
மழைநீர் வழிந்தோடப் பின்எழும்தான் நின்ற
தளத்தில் தலைதூக்கும் நாணல்போல் வாழாமல்
தாய்யென்றும் தந்தையென்றும் பாராமல் மக்களும்
வாய்மொழியும் சொற்களும் ஓய்வெடுக்கும் ஒர்வேளை
ஆழ்மனதை சுட்டுவிடும் போழ்திலே பற்றறுத்து
பாழ்உலகை விட்டுவிடல் மேல்