கோழி ஏன் கூவவில்லை
மாணவர் விடுதி சுவருக்கு அப்பால்
ஒரு குடிசை .
குடிசையின் கூரை மீது ஏறி
கோழி ஒன்று தினம் கூவும் !
அது மாணவனை காலையில் தூக்கத்திலிருந்து
எழுப்பிவிடும் .
மாணவனுக்கு சௌகரியமாய் இருந்தது .
ஒரு நாள் கோழி கூவவில்லை .
குடிசையில் சென்று விசாரித்தான் .
கோழி ஏன் கூவவில்லை என்று .
குடிசைக்காரி எசமானி சொன்னாள்
"கோழி விருந்துக்குப் போயிருக்கு "
"திரும்ப எப்பொழுது வரும்" --என்று கேட்டான்
அப்பாவி மாணவன் .
----கவின் சாரலன்