சம்பவாமி யுகே யுகே

மறையது உண்டு அவனியில் இன்று
அல்லாரை அழிக்க நல்லாரை காக்க
ஆண்டவன் அவதாரம் என்று!

மறைந்தது ஆதவன் மறைத்தது மாதவன்
மன்னவன் சயத்ரதன் சிரம் கொய்ய
மகா பாரதத்தில் அன்று !

மாறியது இருண்மதி தோன்றியது நிறைமதி
மறை பட்டர் காக்க மன்னன் சினம் போக்க
மாயன் தங்கையால் : நன்று !

அழித்தல் காத்தல் போல் ஆக்கவும்
அவன் அவதாரம் ஏதேனும் உண்டா
அன்புடன் சொல்வீர் !

****

கண்ணன் சொன்னது கீதையில் :
_____________________________

பரித்ராணாய ஸாதூநாம் விநாஸா²ய ச து³ஷ்க்ருதாம்|
தர்மஸம்ஸ்தா²பநார்தா²ய ஸம்பவாமி யுகே³ யுகே³ ||4-8||

(நல்லோரைக் காக்கவும், தீயன செய்வோரை அழிக்கவும், அறத்தை நிலை நிறுத்தவும் நான் யுகந்தோறும் பிறக்கிறேன்.)

எழுதியவர் : முரளிதரன் (28-Apr-16, 8:06 am)
பார்வை : 521

மேலே