என்னவளே

என்னவளே.....
என்னுள் மாற்றம் செய்த
உனது பார்வை
ஒவ்வொரு முறையும் என்னை
உன்னை காண தூண்டுகின்றது....

கயல் விழியாளே....
உனது காந்த பார்வை
என்னை ஈர்க்குதடி
உன் வசம்.....
நான் இல்லை என் வசம்.....

மாயம் செய்தவளே.....
உன் விழி அம்பு
என் இதயத்தை குத்தி
காதல் காயத்தை ஏற்படுத்தியதே....
அதற்கு மருந்தாய்
என் இதயத்தை
இடமாற்றம் செய்வாயா...?
உன் இதயத்தை தந்து....

அடி பெண்ணே......
விழியால் பேசும் வித்தை
எங்கேயடி கற்றாய்...?
உன் சிறு பார்வை
ஆயிரம் கவி பாடுகின்றனவே...?

பெண் பூவே.....
உன் மின்னல் பார்வையால்
என்னை காதல் நோயில்
வீழ்த்திவிட்டாய்.....
என்னுள் மாற்றம் செய்தவளே
நீயும் இந் நோய் தாக்கம்
கொண்டாயோ....?
என்னை கடந்து செல்கையில்
என்னை பார்த்த விழிகள்
இன்று
நாணத்தோடு காதல் கொண்டு
மண்ணை பார்க்கின்றனவே.....!

எழுதியவர் : நித்யஸ்ரீ (29-Apr-16, 5:22 pm)
Tanglish : ennavale
பார்வை : 248

மேலே