வாழ்வோம் நாளும்

என்னவர் இருக்கும் இடமே எனக்கு சொர்க்கம்
முள்பாதையானாலும்
அவருடன் இருப்பது
மிக சந்தோஷம்
தார் ஒழுகும் பாலையானாலும்
அவர் மடி கிடப்பது
பாக்கியம்
பொட்டல் காடும்
பொக்கிஷமாகும்
அவரும் நானும் மட்டும்
இருக்கையில்

நான் வாழவும்
வீழவும்
அவர் மடி போதும்


பாம்பு எனை தீண்ட வேண்டும்
அதை அவர் பார்த்து துடித்து
என்னருகில் ஓடி வர வேண்டும்
இது தான் சாக்கு என்று
அவர் மேல் நான் சாய்ந்து கொள்ள வேண்டும்


எனை பாம்பு தீண்டியதை
அவர் அறியக்கூடாது
அவர் அருகில் செல்லும் வரை நான்
மயங்கக் கூடாது
அவரை கண்டதும்
அவர் மடியில் மயங்கி விழ வேண்டும்

~ பிரபாவதி வீரமுத்து


++++++++++++++++++++++++++++++++

தலையணை வேண்டாம்
ஒரு போதும்
உன் மடி போதும்

பஞ்சு மெத்தை வேண்டாம்
உன் உட(னே)லே போதும்
நான் உறங்க
தகனமேடையிலும்
தவறாமல் என்னுடன் இருந்துவிடு
கை கால் விரைத்து கொண்டு எழுகிறது
என்று நினைப்பார்கள்
ஆனால் உண்மையில்
இறந்த உடலுக்கும்
உன்னை தெரியும்
மேலே சாவதை விட
உன் காலடியில் எரிவதையே விரும்பும்
இந்த உடலும்

வாயில் பால் ஊத்த வேண்டாம்
முத்தம் வை போதும்
கடினபட்டு இறப்பதற்கு
சந்தோஷத்திலேயே
இறந்திடுவேன்

பேச்சாளர்கள் கூறுவார்கள்
நான் மேடையில் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே
இறக்க வேண்டும்
நடிகர்கள்
கூறுவார்கள்
நான் நடித்துக் கொண்டிருக்கும்
பொழுதே
இந்த உயிர் பிரிய வேண்டும்
நானும் கூறுகிறேன்


நீயும் நானும் மட்டும்
இருக்க வேண்டும்
அவ்விடம்
உனக்கும்
எனக்கும்
இடைவெளி
எதுவுமின்றி
உன் மடியில்
படுத்திருக்க வேண்டும் நான்
என் உயிர் போகும் உணர்வை நீ அறிந்திருக்கக்கூடாது
உன்னிடம் நிறைய
பேசிக்கொண்டே இருப்பேன்( பேச்சின் இடையில் வலிக்கும் பொழுதெல்லாம் சிரித்து சிரித்தே மழுப்பிடுவேன் )
பேச்சின் நடுவில் உன்னை பார்த்துகொண்டே இருப்பேன்

பின் நடக்கப்போவதை நீ தான் சொல்ல வேண்டும்

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (30-Apr-16, 8:49 am)
Tanglish : vaazhvom naalum
பார்வை : 269

மேலே