வளையற் சிந்து

தேனிருக்கும் பூக்களையே
தேடிவரும் வண்டு - மதுத்
தீஞ்சுவையை உண்டு - புதுத்
தென்றலினைக் கண்டு - அது
தெம்மாங்குப் பாட்டிசைக்கச்
சிலிர்க்கும்மலர்ச் செண்டு ....!!

வானிலவும் மேலிருந்து
வாடிக்கையாய் நோக்கும் - பல
வண்ணமலர்ப் பூக்கும் - நல்
வாசமதும் தூக்கும் - அது
வளையவரும் வேளையிலே
வருத்தமெல்லாம் போக்கும் ...!!!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (30-Apr-16, 5:11 pm)
பார்வை : 145

மேலே