சுழி


பொய்யான தேகத்திற்கு,
மெய்யென பெயரிட்டது யார்?

என் மெய் எங்கோ இருக்க...
மெய்(உடல்) இங்கே இருக்க...

பொய்யான மெய்யினுள்,
மெய்யான மெய்யினை-
பெற்றுவிட தவிக்கும்...

மானங்கெட்ட பெருமனம்...
எங்கெங்கோ அலைய,

நின் விழி காட்டும்,
வழியில்லா வழியிருந்தும்,
வலிகளுடன் கலிகடக்கும்...
என் சுழியை சுட்டெரி....

எழுதியவர் : ரமண பாரதி (20-Jun-11, 1:36 pm)
சேர்த்தது : ரமண பாரதி
பார்வை : 296

மேலே