காலம்
காலம்
நழுவிக் கொண்டிருக்கிறது.
கையில் அள்ளிய நீர்
விரல் இடுக்குகளில்
வழிவதைப் போல்.
கடல் போல் தெரிந்த
குற்றங்களை
காலம்
ஒரு சொட்டுத்துளி ஆக்கிவிடுகிறது.
பனித்துளி மறைவாய்
பகை மறைந்ததுண்டு.
பெருவெள்ளம் வந்தபோது
பெரும் செல்வந்தன் எல்லாம்
பிச்சை எடுத்த போது;
காலம்,
ஈரக் கால்களோடு நடந்து சென்றது.