ஆன்மீகவாதிகள் தேர்தல் பிரச்சாரம் செய்வது சரியா

மதுரை ஆதினம் அவர்கள் ஜெயலலிதாவை ஆதரித்து ஆர். கே நகரில் பிரச்சாரம் செய்யவிருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது
(தி இந்து’ நாளிதழ் பக்கம் 10. மே 5, 2016). ஒரு ஆன்மீகத் தலைவர் தேர்தல் பிரச்சாரத்திற்குச் செல்வது அவர் தகுதிக்கு ஏற்ற செயல்
அல்ல. சைவம் தழைத்தோங்க தமிழ் மொழியே காரணம். தமிழ் வளர்ச்சிக்கு மதுரை ஆதினம் அவர்கள் பாடுபட்டால் அவரைப்
போற்றலாம். அரசியல் சாக்கடையில் அவரும் கால் வைப்பதை சிவ பக்தர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். சாதி மதம் திரைத் துறை
ஆகிய மூன்றும் அரசியலைவிட்டு ஒதுங்கி இருப்பதே நாட்டுக்கு நல்லது. ஏற்கனவே நித்யானந்தாவை பழமையும் பெருமையும்
வாய்ந்த மதுரை ஆதினத்தில் நுழையவிட்டு அவரை இளைய ஆதினமாக அறிவிப்பு செய்ததையே சிவ பக்தர்கள் கடுமையாக எதிர்த்து
கொதித்து எழுந்ததின் விளைவாகவே நித்யானந்தா அங்கிருந்து வெளியேற்றப்பட்டார் என்பது நம் நினைவை விட்டு என்றும் அகலாது.