வித்தியா வித்தியா வித்தியா
பாட்டி, நீதி மன்றத்தில தான் ஒரு அலுவலர் யாரை அழைக்கிறாரோ அந்த ஆளுப் பேரச் சொல்லி மூணு தடவை கூப்பிடுவாரு. நீங்க யாரை வித்தியான்னு கேக்கறீங்க? எத விக்கச் சொல்லிச் சொன்னீங்க?
@@@@
உம் பேரச் சொல்லித்தாண்டி உன்ன மூணு தடவ கூப்பிட்டன்.
@@@
எம் பேர எப்பிடி சொன்னீங்க?
@@@@
உம் பேர எப்பிடி சொல்லணும்?
@@@
வித்யா-ன்னு சொல்லணும் பாட்டி.
@@@
அடி போடி வித்தியா. உங்கப்பனும் ஆத்தாளும் சினிமா மோகத்திலே வாயில நொழையாத, நம்ம தமிழ் மொழிலே நல்ல பேருங்களுக்கு பஞ்சம் வந்திட்ட மாதிரி, கண்ட இந்திப் பேர வச்சு நம்ம தமிழையும் எஞ் செல்லப் பேத்தியையும் கேவலப்படுத்தறது எனக்குக் கொஞ்சங்கூடப் பிடிக்கலைடீ. சரி உம் பேருக்கு என்னடி அர்த்தம்?
@@@@
வித்யா-ன்னா கல்வி-ன்னு அர்த்தம் பாட்டி.
@@@@@
ஏண்டி உனக்கு வித்தியாங்கற இந்திப் பேருக்குப் பதிலா கல்வின்னு பேரு வச்சாக் கேவலமா? இல்லனனா கல்விக்கரசி, கல்விச்செல்வி -ன்னு பேரு வச்சிருக்கலாம். பட்டப் படிப்புப் படிச்ச உங்கப்பனும் ஆத்தாளுமே சினிமா வெறியோட இந்திவெறி பிடிச்சு அலையற போது படிக்காத சினிமா ரசிகர்கள எப்பிடி கொற சொல்லமுடியும்.
@@@@@
நீங்க சொல்லறது நியாயந்தாம் பாட்டி. எனக்கு கல்விக்கரசி- ங்கற ரொம்பப் பிடிச்சிருக்கு பாட்டி
அப்பாகிட்டச் சொல்லி அந்தப் பேரையே எனக்கு புதுப்பேரா வைக்க சொல்லறேன். நா எது சொன்னாலும் எங்கப்பா ஒடனே செய்வாரு.
@@@@
இப்பத்தாண்டி பேத்தி எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்குது.