என் தாய்

வாலாட்டும் விலங்கெல்லாம் பாலூட்டும் குட்டிக்கு
பாலூட்டும் விலங்குக்கு சோறூட்டத் தெரியாது.
வானத்துப் பறவையெல்லாம் சோறூட்டும் குஞ்சுக்கு
சோறூட்டும் பறவைக்கு பாலூட்டத் தெரியாது.
வாழும் தெய்வமாம் என் அன்னைக்கு மட்டும்தான்
பாலூட்டவும் தெரியும்.சொறூட்டவும் தெரியும்.
தாயிற்சிறந்த கோயில் இல்லை என்பார்கள்.
என் தாயிற்சிறந்த தெய்வமே இல்லை என்பேன் நான்.
--
மாமுகி

எழுதியவர் : muthukrishnankannan (14-May-16, 12:34 pm)
Tanglish : en thaay
பார்வை : 858

மேலே