சொல்லாத காதல் நம் நெஞ்சில் 555
என்னவளே...
உனக்கு ஒரு
காதல் கடிதல் எழுத...
நான் பல இரவுகள்
விழித்திருக்கிறேன்...
என் காதலை போல
என் கையெழுத்தும்...
அழகாக இருக்க வேண்டுமென்று
நினைத்தேன்...
கசக்கி எறிந்தேன்
பல காகிதங்கள்...
பல நாட்கள் எழுத
முயற்சித்த கடிதம்...
உன்னிடம் கொடுக்க
நினைத்தேன்...
ஊர் திருவிழாவின் இரவுநேர
வானவேடிக்கையில்...
தூதுவிட்டேன் உனக்கு
என் கடிதத்தால்...
எப்படியோ உன்
அண்ணனிடம் கிடைக்க...
நானும் தேடினேன் உனக்கு
கடிதம் கொடுத்தவனை...
உன் சகோதரனோடு
பதட்டமான என் நெஞ்சோடு...
என் தோழன் என்னை தனியாக
அழைத்து சென்று கொடுத்தானடி...
உன் அழகிய புகைப்படம்
என்னிடம்...
என் கடிதம் உன்னிடம்
சேரவில்லை...
உன் கடிதம்
சேர்ந்ததடி என்னிடம்...
அழகிய கையெழுத்துடன்
உன் புகைப்படம்...
அந்த நாள் இன்றும்
மறையவில்லையடி...
என்னில் இன்னும்
பசுமையாக.....