செல் ஃ பியம்

சாக்ரடீஸ் , ஷேக்ஸ்பியர்
வள்ளுவர்
சொன்னதெல்லாம் நீ சொன்னதாகப்
பதிவு செய்கிறாய் ?
தோழா
இது செல் ஃ பியம்
நாம் வாழ்ந்து கொண்டிருப்பது
செல் ஃ பிய யுகம்
யார் சொன்னால் என்ன ?
நான் சொல்லும்போது
அது நான் சொன்னதுதான் !
ஆஹா !
இந்த ஞானம் பெற்றிட
ஆயிரம் ஆண்டு பழைமையான
ஆலமர நிழலின் கீழ்
நான் அமர வேண்டும்
என்றேன் !
----கவின் சாரலன்