நானும் நீயும்-2

கண்களால் கைது செய்தாய்
பார்வையால் சிறை வைத்தாய்
கோபத்தால் தண்டித்தாய்
கட்டளையால் கண்டித்தாய்
அன்பால் அரவணைத்தாய்
புன்னகையால் விடுவித்தாய்
இதயத்தில் இடம் தந்தாய்
வாழ்க்கையின் பொருள் தந்தாய்
மொத்தத்தில் என்னிடத்தில் உன்னை
முழுதுமாய் அர்ப்பணித்தாய்!!!

எழுதியவர் : சதீஷ் குமார் (25-May-16, 12:07 pm)
பார்வை : 296

மேலே