அளவுக்கு மீறினால் அன்பும் விஷம் தானே?...

அளவுக்கு மீறினால் அன்பும் விஷம் தானே?

அன்பைப் பொழியப் பொழிய அன்பு கூடுகிறது,
அந்த அன்பை அவர்கள் ஏற்றுக் கொண்டவுடன்,
ஏற்றுக் கொண்டவரே தனக்கு மட்டும் தான் என,
நினைத்தவுடன் தானே, தானே அன்பு தடம் பிறளுகிறது?

தனக்கு மட்டுமென நினையா மனம் ஒன்று உண்டோ?
எல்லா உறவுகளுக்குள்ளும் இது தானே நடக்கிறது?
இது தவறா? கொண்டு வந்தது என்ன?
கொண்டு போவது என்ன?

அன்பைக் கொண்டு, அன்பை பெற,
அந்த அன்பிர்க்குரியவரின் அன்பே அன்னியமாவதேன்?
தனக்கு மட்டுமென நினையா மனம் ஒன்று இருந்திட்டால்?

அகன்ற சொர்க்க வாசல் வைகுண்ட ஏகா தேசியன்று - இன்று,
மட்டும் தானா திறந்திருக்கிறது? அந்த தூய அன்பினை கொடுத்து,
பெற்று அளவுக்கு மீறாமல் இருந்தால் என்றும் சொர்கமே இப்புவியில்.

அன்பே கிடைக்காத ஒரு உயிருக்கு அந்த அன்பு கிடைக்கையில்,
ஏனந்த உயிர், உயிர் கொடுத்த உயிரின் உயிரை எடுக்கிறது?
உயிர் எடுக்கா உயிராய், உயிரை உயர்வாய் நினைத்தால்,
உயர்வன்றோ இரு உயிர்களுக்கும் என்றும்?

எழுதியவர் : நட்புடன் (21-Jun-11, 9:53 pm)
சேர்த்தது : நட்புடன்
பார்வை : 425

மேலே