தென்றல் காற்று - குறுங்கவிதை
மெல்லிசைப்பாடி வாசமோடு என்னைத் தொட்டாய்
இதோ என் காதலி தான் வந்துவிட்டாள் என்று
கனவுலகில் இருந்த நான் விழித்தெழுந்தேன்
பின்பு உணர்ந்தேன் என்னைதீண்டியது
அவள் பூங்கரங்களல்ல -அது
ஆற்றங்கரையில் வீசிய இள மாலை தென்றலே
நீதான் என்று ..

