ஆப்தமித்ரா

ஆப்தமித்ரா
---------------------

முத்தம் என்றாலே
அகம் பிறக்கிறாள் மித்ராதான்

ஒரு பெண்ணின் இடையில்
கோடுவிழுதலின்
அளவில் கூட
அர்த்தங்கள் மாறும் என்பதை
என் ஓவியம் சொல்லிவிடும்.

படித்தே அறியாதவளிடம்
வாத்சாயனா பேசுகிறேன்
உலக அறிவு பேசுகிறேன்
ஆங்கிலம் பேசுகிறேன்
அந்த காரில் ஏறி அமர்ந்துவிட்டு
சுற்றும் முற்றும் பார்க்கிறாள்
அன்றுதான் என் முகம் பார்க்கிறாள்

இதற்குமேலும் ஒருவரையும்
சந்திக்கவிடாத
அவளது பார்வையால்
உன் எல்லாத் தோழிகளையும்
சந்திக்கப்போகிறாயா
என்று ஞாயமே இல்லாமல் கேட்கிறாள்

ஆண் தீண்டா மலரவள்,
அடடே என்று தழுவிய விரல்களினால்
அனிச்சைகள் நிகழ்த்தும் புதிரவள்

ஒரு பனித்த ரோஜாவை
முத்தமிட்டுவிட்டு
அவளைப் பார்க்கிறேன்
கண்கள் கிறங்கி கன்னம் சிவக்கிறாள்

அட பூக்களின் திருடா
நீ இதழ் பதிந்தது என்னவோ
அந்த இதழ்களில் தான்
உன் பார்வை தின்றது மட்டும்
என் கன்னங்களைத் தானே டா

சுவாரஸ்யங் களுக்கிடையில்
சிறிதாய் சிரித்திடும் போது
அவள் பற்கள் தொடுக்கும்
பூமாலைகளுக்குள் தொலைகிறேன்

யாரையும்
நேசிப்பதாக சொல்லிவிட்டு
திரும்பிப்பார்த்த போது
காணாமல் போகின்றவளின்
காதல் மேல்
ஒருவருக்கும் அடுப்பமில்லைதான்

நேற்றொரு தோழியிடம் சொல்லியிருந்தேன்
சண்டையிட்டுப் பிரியலாமா
என்று சொல்லி
பிரிந்துபோகும் அதேதருணம்
அலைப்பேசியிடம் கோபம் கொள்கிறேன்
அழைக்கமாட்டாளா என்று
உடனே அழைத்து
உன் கைப்பேசியின் மேல் கோபமா,, ம்ம்
அதை உடைத்துவிடாதே
அது இருக்கும் தைரியத்தில்தான்
உன்னை போகசம்மதிக்கிறேன்
என்றவளின் காது பிசுகி
இதைச் சொல்லத்தான் அழைத்தாயா
என்று காதல் பண்ணவேண்டும்போல் ஆசைதான்

என் ஞாயங்களை சமர்ப்பிக்க விடாமல்
என் வாய்மூடிக் கொள்கிறாள்
செவி ஓரம் அருகி
மூச்சுத் தளர்த்திவிட்டு
இந்த இதழ்கள்
இன்னும் உந்தன் எத்தனை முத்தங்களுக்காய்
காத்திருக்கின்றன தெரியுமா
உன் முத்தங்கள் கொடுத்து
என்னை கடன் காரி யாக்கு என்பாள்

அகப்பிறையில் நீந்தி
சன்னமாய் காதல் கோடு
கிழிக்கிறேன்
கடுமையான கத்தல்களுக்கிடையில்
சமைக்கலாமா ம்ம்
சமைத்தாயிற்றே
சரி ,, வெட்டியதன் மிச்சம் ???
இதோ என்று இருகைகளை
இணைய விரிக்கும்போது
அடுத்தென்ன சப்திக்கலாம்
அந்தபோதும்
ஆண்மைப் போர்த்திக் கொள்வது
அவள் பெண்மையைத்தானே
ஓவியம் ஆகவா ஓவியம் ஆக்கவா ம்ம்ம்

எத்தனைமுறை போர்த்தியும்
நீ போர்த்திக்கொள்ள சலிக்காதவன் டா
என்னும்போது எழுதிக்கொள்கிறேன்
என் நாட்குறிப்பில்
எழுதித் தீராத என் டைரியின் அத்யாயம் “அவள் “

"ஆப்தமித்ரா"

“பூக்காரன் கவிதைகள்”

எழுதியவர் : அனுசரன் (6-Jul-16, 11:15 pm)
பார்வை : 119

மேலே