மழையே நீ வா வா
மழையே நீ வா ....
சாரல் துளிகள் சாலையில் தெளிக்க...
உனை பார்த்து மக்கள் கொஞ்சம் ஒதுங்க...
டீக் கடையில் கொஞ்சம் டீயுடன்
பஜ்ஜி போண்டா விற்பனை ஆகும்
அதுவரை நீ வா வா.....
பிய்ந்த குடை தைக்கும்
தாத்தாவிற்கு கொஞ்சம் காசு கிடைக்கும் ....
அதுவரை நீ வா வா....
சண்டை போட்டு
வேலைக்கு போன மகன்
வீடு திரும்ப ....
பேருந்து நிறுத்தத்தில்
குடையுடன் காத்து கிடக்கும்
தந்தையின் அன்பு புரிய ....
அதுவரை நீ வா வா.....
விவசாயிகள் வானம் பார்த்து
கொஞ்சம் மகிழ்ச்சி பொங்கட்டும்
அதுவரை நீ வா வா....
குழந்தைகள் விடுமுறை எதிர்பார்த்து
காத்திருக்கையில்...
பிள்ளை மணம் குளிர....
அதுவரை நீ வா வா....
வற்றிய குளத்தில் கொஞ்சம்
நீர் நிறையட்டும் அதுவரை நீ வா வா...
காய் கனிகள் கொஞ்சம்
விலை மலிவு ஆகட்டும்
அதுவரை நீ வா வா...
பூக்காத செடியில் எல்லாம் பூக்கள் பூக்க....
காய்க்காத மரங்கள் கூட காய்த்து குலுங்கட்டும்
அதுவரை நீ வா வா....
நீ வந்ததும் மின்சாரம் போக
மையிருட்டில்
ஒற்றை மெழுகுவர்த்தியின்
அழகை இரசிக்க ....
அதுவரை நீ வா வா....
மழைத்துளிகள்
நீரில் ரங்கோலி கோலம் போட
அதுவரை நீ வா வா....
நீ போன பின்பு
மரத்தில் கசியும்
துளிகள் தொட்டு
விளையாட ....
அதுவரை நீ வா வா ...
உலகம் கொஞ்சம்
இயற்கை பானம்
பருகட்டும் .....
அதுவரை நீ வா வா ....
கவியுடன்,
கிரிஜா.தி