எங்கே மனிதநேயம்
ஏதாவது எழுத வேண்டும்
எழுத வேண்டும்
என்று
உண்மையை எழுத மறந்த
கவிதாயினி நானோ
ஆம்
இங்கே
வேதனைகள்
அதிகம்
இருக்க
காதல் ரசத்தை பிழிந்து கொண்டிருக்கிறேன்
(நான் என்ன செய்வது
எதுவும் மாறவில்லையே...
செவிடன் காதில் சங்காய் போனதே
என் கவி.
எனை போல் எல்லா கவிஞனுக்கும்
ஓர் சலிப்பு இருக்கவே செய்கிறது.
'எப்பொழுது தான் இந்த உலகில் மனித நேயம் படரும் '
என்பது தான் அச்சலிப்பிற்கான முற்று.
மனிதநேயம் படர்ந்தால் யாவும் சரியாகிவிடும்
என்பது என் கருத்து.
ஊழல் இருக்காது
அசுத்தம் இருக்காது
வஞ்சனை இருக்காது
உலகமே
புதிதாய் பிறந்த குழந்தை போல்
பரிசுத்தமாகிடும்.
அடிக்க அடிக்க
அம்மியும் நகரும்
நாம நம்ம வேலைய சரியா பண்ணா
சரியாக வரும்
என்றாவது ஒரு நாள்.
பாரதி என்ன விடுதலை
பெற்ற பின் இறந்தாரா
ஆனால் பாடி விட்டு செல்லலையா...
அவரது பாட்டால் தான் விடுதலை
கிடைத்தது என்றால் அது மிகையாகாது.
ஒரு நாள் நிச்சயம்
விடியும்
அதைப் பார்க்கத் தான்
உயிரோடிருப்போமா
என்று தெரியாது
அதற்காக என்ன?
விடிந்தால் சரி தான்.
நாளைய தலைமுறை
நன்றாக இருந்தால் போதும்.
என் பாரதி
பாடிவைத்து விட்டு போனான்.
உயிரோடு இருக்கும்
தருணம் ஒருவரும் போற்றவில்லை
பாடல் நனவாகும் பொழுது
காலனும் விட்டு வைக்கவில்லை
இன்று போற்றி
புகழுகிறார்கள்
அது உண்மையா
என்று தெரியவில்லையே
யாவும் நீயறிவாய்
பராபரமே
என் பாரதி
இன்னும் நிறைய
பேச வேண்டி உள்ளது
பேசுவோம்)
பொருளுக்கு பாட்டு பாட
பொருளை மறந்தேன்
மரத்தின் வேரை
மறந்துவிட்டு(அறுத்து விட்டு)
பூவை ரசிக்கிறேனோ
பாரதி கண்ட
புதுமைப்பெண்
என்று கூறிவிட்டு
வழக்கமாக எல்லா
சாதாரண நங்கை
போல்
நடந்து கொள்கிறேனோ
அநீதிகளுக்கு
என் குரல்
கேட்கவில்லையா !?
அன்பை உயிர் என்றால்
சமுதாயத்தை சுவாசம் என்பேன்
சுற்று சூழல் சரியில்லாமல்
நாம் எப்படி லயிக்க முடியும்
அதற்கு தான் மனம்
இடங்கொடுக்குமா?
பிணத்தின் கையிலிருந்து
விழுந்த பூவை ரசிக்கமுடியுமா...
கதறி அழத் தான் முடியும்.
வார்த்தை கூட ஊமையாகிவிடும்
அந்நொடி
ஆனால்
மனிதனோ
சாலையில்
உயிருக்கு போராடும்
மனிதனிடம்
பணம் நகை பறிக்கிறான்
தரவில்லை எனில்
கழுத்தை போட்டு
மிதிக்கிறான்
இது தான் மனிதநேயமா...
பிறர் விழும் பொழுது
சிரிப்பது தான் நாகரீகமா
கைக்கொடுத்து உதவினால்
குறைந்தா போய்விடும்
மரத்திலிருந்து உதிரும்
இலை
மறந்தும் மரணிப்பது இல்லை
உரமாகிறது
மனிதா நீயும்
விழுந்தாய்
எனில்
விஷ்வரூபமாய் எழு
பறவைகள் கூட
பறக்கும் பொழுது
சிறகிலிருந்து
இறகு உதிரத்தான் செய்யும்
அதற்காக
அவை பறக்காமல் இல்லையே...
மனிதா
முன்னேறு
விழுந்தால்
எழுந்துவிடு
வீறுநடைபோடு
பாதை உனக்கானது
பயணம் உன்னுடையது
தினம் புதிதாய் பிறந்திடு
~ பிரபாவதி வீரமுத்து