நிகழ்வுச் சுமை...

என்
ஞான விஸ்தாரம்
கருதியே,
நாளும் விரிக்கிறேன்
சிந்தனைச் சிறகுளை...!

சிறகுகளின்
இறகுகள் எங்கும்
ஒளிந்திருக்கின்றன
ஓராயிரம்
நிகழ்வுகளின் சுமைகள்...!

நினைவுகளில் மூழ்கி,
நிஜங்களை
தொலைத்து விடுவேனோ
எனும் அச்சம் எழுந்தாலும்
மறக்க மறுதலிக்கிறது
என் மனசு - உன்
நினைவின் சுகத்தை...!

எழுதியவர் : (24-Jun-11, 12:47 pm)
சேர்த்தது : Sakthi Nila
பார்வை : 349

மேலே