எல்லாம் எதுக்கு வரிசையா இங்க நிக்கறீங்க

தாம்பரத்தலே இருந்து 10 கி.மீ தூரத்திலே விவசாய நெலம் விக்கறாங்களாம். ஒரு ஏக்கர் 20 லட்சமாம். ஆளுக்கு 5 ஏக்கர் வாங்கலாம்னு சென்னையிலிருந்து வந்திருககோம்..
@#
எதுக்கங்க அவ்வளவு தூரம் போயி நெலத்தை வாங்கரீங்க?
@%##
அய்யா நகரத்திலே இனிமே வாழ முடியாது.பூச்சி மருந்து செயற்கை உரம் போட்டு வெளஞ்ச பொருள வாங்கிச் சாப்படறதும் கடைல விக்கற பொருள்கள வாங்கிச் சாப்படறதும் வெஷத்தை சாப்படறதும் ஒண்ணுதாங்க.விவசாய நெலத்தையெல்லாம் வீட்டு மனைகளாகி விக்கறாங்க. வருங்காலத்தல இறக்குமதியான உணவு பண்டங்கள் தான் கெடைக்கும்.
@%௤#
சரி இங்க நெலத்தை வாங்கி என்ன செய்யப்போறீங்க?
@%@
சென்னையிலிருந்த எங்க வீடுகளையெல்லாம் வித்துட்டு அரசாங்க வேலையையும் ராஜினாம பண்ணிட்டோம். எங்க நெலங்கள்ல ஒரு வீட்டைக் கட்டிட்டு இயற்கை விவசாயம் செய்யப் போறோம். சுத்தமான காத்து நஞ்சு இலலாத காய்கறி கீரை வகைகள் எல்லாம் உற்பத்தி பண்ணப்போறோம். எங்க தேவைக்குப் போக மிச்சம் இருக்கறத மலிவு வெலைல உழவர் சந்தையில விக்கப்போறோம். நகர நரக வாழ்க்கை இனியும் வேண்டாம்.
@#@
அய்யா நீங்க எல்லாம் செய்யறது புனிதமான காரியம். வாழ்த்துக்கள்.
நஞ்சில்லா உணவுண்ண கொடுத்து வச்சவங்க நீங்க. வாழ்க!

எழுதியவர் : மலர் (18-Jul-16, 12:25 am)
பார்வை : 336

சிறந்த கட்டுரைகள்

மேலே