மழை !!!!!!!!
வளம் கொழிக்கும் பூமியெலாம்
வறண்ட காடாகியதே !
பசுமையான பயிர்களெலாம்
பாழாகிப் போனதுவே !!
நிலம் நெகிழ மனம் மகிழ
விரைந்து வா கன மழையே !!!
சுட்டெரிக்கும் வெய்யிலிலே
பட்ட துயர் போதாதா ?
கட்டவிழ்த்த கண்ணீரால்
நனைந்தது போதாதா ?
ஏரி குளம் நீர் நிறைய
பொங்கி வா புயல் மழையே !!!!