மழை !!!!!!!!

வளம் கொழிக்கும் பூமியெலாம்
வறண்ட காடாகியதே !
பசுமையான பயிர்களெலாம்
பாழாகிப் போனதுவே !!
நிலம் நெகிழ மனம் மகிழ
விரைந்து வா கன மழையே !!!

சுட்டெரிக்கும் வெய்யிலிலே
பட்ட துயர் போதாதா ?
கட்டவிழ்த்த கண்ணீரால்
நனைந்தது போதாதா ?
ஏரி குளம் நீர் நிறைய
பொங்கி வா புயல் மழையே !!!!


எழுதியவர் : தளபதி நாகராஜ் (24-Jun-11, 10:13 pm)
சேர்த்தது : thalabathy nagaraj
பார்வை : 340

மேலே