காத்திருந்த வேளை

: உன்னை காதலிக்குமுன் உனக்காக காத்திருந்த அவ்வேளை:
தாய் சேய்க்காக காத்திருந்த வேளை
மயில் மழைக்காக காத்திருந்த. வேளை துளி முத்தாக காத்திருந்த வேளை

உன்னை காதலிக்கையில் உன்னோடு நானிருந்த வேளை

அவ்வேளை
சுழல் போல சோகங்கள் சூழ்ந்தாலும் பம்பரமாய் சுழன்று நின்ற.
அவ்வேளை
உயிர் விட்டு பிரிந்தாலும் மறவாது அவ்வேளை காதலியே

காலம் செய்த சதி வேலை
காதல் உணர்ச்சிகள் உயிரோடு சிதைந்து என் கண்முன்னே நீ உறங்கும் அவ்வேளை

உனக்காக உன் கல்லறையின் பக்கத்தில் இடம் தேடி நான் காத்திருக்கும் இவ்வேளை
கால(னும்)மும் வெல்லும்
நம் காதலும் வெல்லும் காதலியே...............

எழுதியவர் : ஜெகவீரபாண்டியன் (31-Jul-16, 8:23 am)
பார்வை : 132

மேலே