இல்லை என்பதில்லை....
இருப்பின் சிறப்பு,
இறப்பில் அறிந்தேன்....
இறப்பின் மகத்துவம்,
இயற்கையின் தனித்துவம்....
இறப்பை வெல்லும் இரகசியம்,
இருப்பில் கரைந்த பொழுது....
தந்தையின் தற்கொலை,
இரகசியங்களின் இரகசியம்.....
அறியமுடியாததிலிருந்து,
அறிந்த ஒன்று-
அறிந்து கொள்ள ஏதுமில்லை....
அறிந்த பின்னும் ஏதுமில்லை.....
இல்லையென்ற...
ஒன்றிருக்கும் வரை,
ஒன்றிருந்து கொண்டேயிருக்கிறது,
இல்லையென்று மறுப்பதென்பது....
இருப்பின் நிரந்தரத்தை உறுதிசெய்யவே....