சிறைக் காதலர்கள்

இவள் வாய் பேசத் தொடங்கியதும்
அவள் தாய் மூச்சு அடங்கியது

கந்தை உடுத்த வழியின்றி வாடுகின்றாள்
தந்தை படுத்து இளமை ராகம் பாடுகின்றான்

பட்டம் விடும் வயதில்
இவளுக்கோ திருடிப் பட்டம்

இது இரண்டாம் தாய்
தீட்டிய திட்டம்

இவன் போதைக்கு அடிமை
சிறுவயதில்
பாதையைத் தவறவிட்டான்
அனைத்தும் பெரும்வயதில்

தூக்கி வளர்த்த பெற்றோரை
தூக்கிலிட வைத்தான்

இவனும் இவளும் பள்ளியறையில்
படிக்காமல் சிறையில் துடித்தனர்

இவன் அவள் மனச்சிறையில்
அவள் இவன் இனச்சிறையில்

இளம்பிறைகள் இரண்டும்
தவித்தன தினச்சிறையில்

விடுதலை ஒருநாள்
மலர்ந்தது
விடியலும் ஒருவழியாய்ப்
புலர்ந்தது

பறவைகள் பறக்கும்போது
சிறைப்பட்டது சிட்டுக்குருவி
இவர்களைப்போல்

சிறகுகள் மட்டும்
பறக்கத் தொடங்கியது
கண்களில் மட்டும் நீர்
இறங்கத் தொடங்கியது

வாழ்வை இழந்த
அந்த இளம் பிறைகளுக்கு
இளம் பறவைகளுக்கு

எழுதியவர் : குமார் (6-Aug-16, 6:53 pm)
பார்வை : 208

மேலே