கணவனை கடவுளாக பாக்க வேண்டாம் மனுசனா பாருங்க

கணவன் இறந்த பின் பெண்கள் எப்படியோ தான் பெற்ற மக்களை அனுசரித்து வாழ்ந்து விடுகின்றனர்.

ஆனால் மனைவி போன பின் கணவன் படும் துயர் இருக்கிறதே,கொடுமை.

*தானாகவே காப்பி கூட போடத் தெரியாத கணவன்,*
*தண்ணீரைக் கூடத் தானே மொண்டு குடிக்காத கணவன்*
*மனைவியின் மறைவுக்குப் பின் ஏனென்று கேட்க ஆளில்லாமல் போகிறான்.*

*ஒரு ஆணுக்கு நன்றாகவே சமைக்கத் தெரிந்தாலும் கூட மருமகளோ, மகளோ சமைலறையில் ஆளும் போது அங்கே இந்த ஆணால் தன்னிச்சையாக நுழைய முடியாது.*

*வேண்டுவனவற்றை தானே சமைத்துக் கொள்ளவோ எடுத்துக் கொள்ளவோ கூசுகிறார்கள்.*

*என்ன கொடுத்தார்களோ எப்போது கொடுத்தார்களோ*
*கொடுத்ததை கொடுத்த போது சாப்பிட்டுக் கொள்ளணும்.*

*ரெண்டாவது காபி கூட கேட்க முடியாது.*

*தலைவலியில் ஆரம்பித்து எப்பேர்ப்ட்ட சுகக்கேடு வந்தாலும் ஆதரவாகப் பேசக் கூட ஆளிருக்காது.*

*இதெல்லாம் என் உறவுக்குள்ளே,*
*நட்பு வட்டத்திற்குள்ளே கண்ட உண்மை.*
*துளியும் அதிகப்படியில்லை.*

*என் கணவர் காலை எட்டரை மணிப் போல*
*சும்மா கிச்சனில் வந்து எதானும் பேச ஆரம்பித்தால் காபி வேணும்னு அர்த்தம்.*

*காபி குடித்தால் காலை உணவின் அளவு அவருக்குக் குறைவதால் கொடுக்க யோசிப்பேன்

*இப்போதெல்லாம் காலையில் என் கணவர் கேட்காலேயே ரெண்டாவது காபி கொடுத்துடுவேன்.*

*எனக்குப் பின் அவருக்கு யார் கொடுப்பாங்க?*
*இந்த நினைவு வந்தால் மனசு ரொம்ப பாரமாகிடுது.*

*மனைவி இல்லாத கணவன் உயிரற்ற உடல் போலே!!*
*சகோதரிகளே!!*

*யாருக்கு விதி எப்போன்னு தெரியாது!*
*உங்கள் கணவர் உங்களுக்குப் பின் வாயில்லாப் பூச்சிதான்!*

*முடிந்தவரை கணவனிடம் அனுசரணையாக இருங்கள்!! அதுவும் முதுமையில். ☆

ஒரு தடவ தான வாழப்போறீங்க...

கணவனை கடவுளாக பாக்க வேண்டாம்...
மனுசனா பாருங்க...

எழுதியவர் : செல்வமணி (21-Aug-16, 10:08 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 331

மேலே